Sunday 2 March 2014



அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இருதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இருதயத்திற்கு ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள் ளனர். ஆஸ்திரேலி யாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் இந்த ஆய்வினை மேற்கொண்டது.

ரத்த நாளங்கள் பாதிப்பு:

டிக்கின்சன் குழு வினர் மேற்கொண்ட ஆய்வில் 16 ஆரோக்கிய மான நபர்கள் ஆய் விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 8 நபர் களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப் படுத் தப்பட்ட தககாளி சூப் 10 முறை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன் படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய் யப்பட்டது. இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இரு தய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத் தமும் அதிகரித்திருந்தது.

அதிக உப்பு ஆபத்து:

இதே ஆய்வு மீத முள்ள 8 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஒட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன் படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது. எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

மேலும் உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ûஸடை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளிவரும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. நம் ஊரில் நிறைய பேர் ஊறுகாயும், அப்பளமும்தான் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


அடிக்கடி ஹோட்டலுக்குப் போய் சிக்கன், மட்டன் என்று அசைவ உணவுகளை விரும்பிச் சுவைப்பவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!

கடந்த வாரம், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு ஒரு போன் செய்தவர், ‘வெளி மாநிலத்தில் இருந்து பெட்டி பெட்டியாக ஆடு, மாடு இறைச்சிகளை, சென்னைக்குக் கொண்டு வர்றாங்க’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து இருக்கிறார்.

இந்த விஷயம் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவே, உடனடியாக சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 கிலோ மாட்டு இறைச்சியும் சுமார் 3,500 கிலோ ஆட்டு இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர், ”எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் சோதனைக்குக் கிளம்பினோம்.

 நாங்கள் சோதனை நடத்த ரயில்வே அதிகாரிகள் முதலில் அனுமதிக்கவே இல்லை. அதன்பிறகு, ரயில்வே துறை உயர்அதிகாரிகளிடம் பேசித்தான் அனுமதி வாங்கினோம்.

ஆந்திராவில் இருந்து வந்த நிறைய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பெட்டி யைப் பிரித்ததுமே துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது. அவ்வளவும் மாட்டுக்கறி.

இன்னொரு பெட்டியில் இருந்த கறியைத் திறந்தபோது, ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. இவை எல்லாம் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

அங்கே இருந்து சென்னை வந்து சேர கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகும் என்றால், அந்த மாட்டை எத்தனை நாட்களுக்கு முன் வெட்டி இருப்பார்கள்? அந்த இறைச்சியை சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்குதான் சப்ளை செய்திருக்கிறார்கள். எங்கள் சோதனை யைப் பார்த்ததும், இறைச்சியை டெலிவரி எடுக்க வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

கண்டிப்பாக இதை ஒரு தனிநபர் செய்திருக்க முடியாது. இதற்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருக்க வேண்டும். சென்னைக்கு வந்து இறங்கிய அத்தனை இறைச்சி பார்சல்களும் தகுதிச்சான்றிதழ் பெறாதவை.

உணவுப் பொருட்களை அனுப்பும் பட்சத்தில், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்வே சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதிச் சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும். சான்றிதழ் இல்லாத பட்சத்தில், அங்கு இருக்கும் ரயில்வே அதிகாரிகளே அவற்றைப் பறிமுதல் செய்து இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அவர்கள் செய்யவில்லை.

அங்கு பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை, கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில் குழிதோண்டி, பிளீச்சிங் பவுடர் போட்டு, பினாயில் ஊற்றிப் புதைத்தோம். சென்னைக்கு வந்த இறைச்சிப் பெட்டிகள் மீது, ‘உஸ்மான், சென்னை’ என்று மட்டும்தான் எழுதப்பட்டு இருக் கிறது. யார் அந்த உஸ்மான் என்றும் தேடி வருகிறோம்.

ஒரு நாளைக்கு சுமார் 8,000 கிலோ இறைச்சி கொண்டு வருகிறார்கள் என்றால், அது ரோட்டோரக் கடைகளுக்கு மட்டும் போயிருக்க சாத்தியம் இல்லை. நாங்கள் விசாரித்த வரையில் சென்னையில் உள்ள சில ஸ்டார் ஹோட்டல்களுக்கும் இந்த இறைச்சி சப்ளை செய்யப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம், இந்த விவகாரத்தில் ஈடுபட்ட அத்தனை பேரையுமே பிடித்து விடுவோம்” என்று உறுதியுடன் சொன்னார்.

சிந்தாதரிப்பேட்டையில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் பேசினோம். ”எங்க கிட்ட ஆட்டுக் கறி வாங்கினா, ஒரு கிலோ 430 ரூபாய். வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரும் கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதைப் பெரும்பாலும் ஹோட் டல்காரங்கத்தான் வாங்கிட்டுப் போவாங்க.

அந்த மாதிரி இறைச்சியை எங்காவது ஒரு குடோன்ல வெச்சுப் பிரிச்சு, நேரடியா சம்பந்தப்பட்டவங ்களுக்கு சப்ளை பண்ணிடுவாங்க” என்றார். தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீநிவாசனிடம் பேசினோம். ”நானும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்.

ரோட்டோரத்தில் கடை நடத்துபவர்களும், டாஸ்மாக் கடைகளுக்குப் பக்கத்தில் கடை வைத்து இருப்பவங்களும்தான் இது மாதிரியான கறியைப் பயன்படுத்த முடியும். பெரிய ஹோட்டல்களில் எல்லாம் ஃப்ரெஷ்ஷாக வெட்டப்படும் இறைச் சியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம்” என்றார்.

சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி யிடம் கேட்டபோது, ”சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனியும் இப்படி நடக்காமல் தடுக்கப்படும்” என்றார். வெளியே சாப்பிடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கத்தான் வேண்டும்..



பொதுவாக வீட்டிலேயே குளியலறையில் தான் கிருமிகள் மற்றும் அழுக்குகள் அதிகம் இருக்கும். அத்தகைய குளியலறையை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ள, நாம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களைத் தான் பயன்படுத்துவோம்.

ஆனால் பணம் இல்லாத சமயத்தில், குளியலறையை சுத்தம் செய்யும் தீர்ந்த நேரத்தில் என்ன செய்வீர்கள்? யோசிக்காதீர்கள், அப்படி பணம் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே குளியலறையை சுத்தப்படுத்தலாம். அதிலும் அந்த பொருட்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான சுத்தப்படுத்துவதில் முதன்மையாக இருக்கக்கூடியவை.

இங்கு குளியலறையின் தரையை சுத்தம் செய்வதற்கு உதவும் சில இயற்கைப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி உங்கள் குளியலறையின் தரையை பளபளப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.

1/2 கப் பேக்கிங் சோடாவைக் கொண்டு சூப்பராக குளியலறையின் தரையை மின்ன வைக்கலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பேக்கிங் சோடாவை குளியலறையின் தரையில் தூவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் தேய்க்க வேண்டும். இதனால் குளியலறையின் தரை சும்மா பளிச்சுன்னு இருக்கும்.

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், இதன் சாற்றினை குளியலறையின் தரையில் தெளித்து, உடனே நன்கு பிரஷ் கொண்டு தேய்த்துவிட்டால், கறைகள் நீங்கிவிடுவதோடு, குளியலறையும் நன்கு நறுமணத்துடன் இருக்கும்.

உப்பும் ஒரு சூப்பரான சுத்தப்படுத்தும் பொருட்களில் ஒன்று. அதிலும் மஞ்சள் நிற கறைகளை எளிதில் போக்க வேண்டுமானால், உப்பை தரையில் தூவி, சிறிது நேரம் கழித்து பிரஷ் கொண்டு தேய்த்து, பின் சுடுநீர் கொண்டு குளியலறையை கழுவி விட வேண்டும்.

வெள்ளை வினிகருக்கும் சுத்தம் செய்யும் தன்மை உள்ளது. அதிலும் வினிகரை குளியலறையின் தரையில் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை சாற்றினை தெளித்து, பிரஷ் கொண்டு தேய்த்து விட்டு கழுவ வேண்டும்.

ஆம், சோடா கூட சுத்தம் செய்யும் பண்பைக் கொண்டுள்ளது. அதற்கு சோடாவை கறை அதிகம் உள்ள இடங்களில் ஊற்றி, பின் தேய்க்க வேண்டும். இதனால் கறைகள் உடனே நீங்கும்.

வோட்கா சற்று விலை அதிகமான பொருளாக இருந்தாலும், இதனைக் கொண்டும் குளியலறையை சுத்தம் செய்யலாம்.



இன்றைய அவசர காலத்தில் வீட்டில் தூங்குவதை விட, அலுவலகத்தில் தூங்கும் நேரம் அதிகமாகிவிட்டது. என்ன புரியவில்லையா? ஆம், காலையில் எழுந்து சரியாக சாப்பிடாமல், உடற்பயிற்சி செய்யாமல், அலுவலகத்திற்கு வந்து வேலை செய்து, மதிய வேளையில் நன்கு மூக்கு முட்ட சாப்பிட்டு, பின் என்ன தூக்கம் தான்.

 இதனால் செய்யும் வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியாமல், மாலையில் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சனையை அலுவலகத்திற்கு செல்வோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்திப்போம்.

ஏனெனில் காலையில் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்த பின்னர், மதியம் முழு சாப்பாட்டை சாப்பிடுவதால், செரிமான மண்டலத்தின் வேகம் குறைந்து, உணவுப் பொருட்கள் செரிமானமடைய உடலின் எனர்ஜியானது செலவாவதால், உடலானது சோர்வடைந்து, மதிய வேளையில் தூக்கம் வருகிறது.

அதுமட்டுமின்றி, அப்படி தூக்கம் வரும் போது தூங்காமல் இருந்தால், பின் தலை வலியானது அதிகரித்துவிடும். ஆகவே இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட ஒருசில ட்ரிக்ஸ்களை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் மதிய வேளையில் வரும் தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.

மதிய வேளையில் தூக்கம் வராமல் இருக்க வேண்டுமெனில், முதலில் அளவாக சாப்பிட வேண்டும். அதிலும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். இத்தகைய உணவுகள் வயிற்றை நிரப்புவதோடு, ஊட்டச்சத்து நிறைந்தும் இருக்கும். உதாரணமாக, சாலட் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றது.

ஒருவேளை நன்கு மூக்கு முட்ட சாப்பிட்ட பின், பாட்டு கேட்டால் அது தூக்கம் வருவதைக் கட்டுப்படுத்தலாம். அதிலும் நன்கு குத்து பாட்டாக கேட்டால், அது உடலின் சோர்வைப் போக்கி, தூக்க உணர்வைத் தடுக்கும்

உட்கார்ந்து கொண்டே லேசாக ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சிகளை செய்தால், தூக்கம் கலைவதோடு, தசைகள் புத்துணர்ச்சி அடைந்துவிடும்.

பொதுவாக புதினா புத்துணர்ச்சி தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஆகவே புதினா சுவை கொண்ட சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள்.

உணவு உண்ட பிறகு, கம்ப்யூட்டர் முன்பே நீண்ட நேரம் இல்லாமல், தூக்கம் வரும் சமயம் லேசான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது செரிமானத்தை எளிதாக்கி, தூக்க கலக்கத்தில் இருந்து விடுதலை தரும்.

நன்கு ஃபுல்லாக சாப்பிட்ட பிறகு, வேலை செய்யும் போது தூக்கம் வந்தால், உடன் பணி புரியும் நண்பர்களிடம் சிறிது நேரம் பேசுங்கள். இதுவும் தூக்கத்தை விரட்டிவிடும்.

இல்லாவிட்டால் ஒரு கப் காபி குடிக்கலாம். இது நிச்சயம் தூக்கத்தை போக்கி, மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

என்ன செய்தாலும் தூக்கம் போகவில்லையா, அப்படியானால் நண்பர்களுக்கு போன் செய்து பேசுங்கள். இது தூக்கம் வரும் எண்ணத்தை தடுப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையவும் செய்யும்.

டார்க் சாக்லெட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, உடலின் குளுக்கோஸ் அளவை அதிகரித்து, உடலின் சோர்வைப் போக்கி, தூக்கத்தை தடுக்கும்.

தண்ணீர் குடித்தால், உடலின் வறட்சி நீங்குவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் சோர்வைப் போக்கி, தூக்க கலக்கத்தில் இருந்து விடுதலைப் பெறச் செய்யும்.


மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் பணியினை தவறாமல் செய்ய வேண்டுமெனில் நாம் அவற்றை பேணி காப்பது அவசியம்.அந்த வகையில் நுரையீரலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

நாம் நமது நுரையீரலை அதிக அக்கறையுடன் கவனித்து வந்தோமென்றால், நுரையீரலும் நம் வாழ்நாள் முழுதும் செயல்படும்.எவ்வித வெளிப்புற பாதிப்பும் இல்லாதவரை, நமது நுரையீரலும் நீடித்து உழைக்கக்கூடியவையே. சில விதி விலக்குகள் தவிர்த்து, நாம் நமது நுரையீரலை எவ்வித சிக்கலுக்கும் உள்ளாக்காத வரை, அவையும் நம்மை எவ்வித சிக்கலுக்கும் உள்ளாக்குவதில்லை. நமது ஆயுள் உள்ள வரை ஆரோக்கியமான நுரையீரலைப் பெற சில வழிகளை இக்கட்டுரையில் காண்போம்.


புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்

அடிப்படையில் புகைப்பிடித்தல் என்பது நமது நுரையீரலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயமாகும். புகைப்பிடித்தலுக்கு உள்ளாக்கும் போது நமது நுரையீரலுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைப்பதில்லை. எந்த அளவிற்கு அதிகம் புகைக்கிறோமோ, அதே அளவிற்கு கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் COPD தாக்கும் வாய்ப்புகள் அதிகம். நாம் இருக்கும் இடத்தில் எவரேனும் புகைப்பிடித்து இருந்தாலோ அல்லது நமது அருகிலிருக்கும் மூன்றாவது நபர் புகைப்பிடித்தாலோ நமக்கு தீங்கு விளையும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. சிகரெட் புகைப்பதை மட்டும் நிறுத்தினால் போதாது. மாரிஜூனா, சுருட்டுகள், குழாய் மூலம் புகைப்பிடித்தல், நமது நுரையீரலுக்கு அதே வழியில் தீங்கு விளைவிக்கும்.


சுத்தமான காற்றுக்காக போராடுங்கள்

உலகில் 155 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். காற்று மாசுபாடு ஆஸ்துமா, COPD போன்ற நோய்களை மட்டும் தருவதில்லை மேலும் மக்களையும் கொல்கிறது. ஒழுங்கு குறைபாடுகளை எதிர்ப்பதன் மூலமும் சுகாதாரமான காற்றுக்கான விதிகளை ஆதரிப்பதன் மூலமும் நாம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தனி நபராக நாம் செய்ய வேண்டியது யாதெனில் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவது, குப்பைகள் மரக்கட்டைகள் எரிப்பதை தவிர்ப்பது, வாகனங்கள் பயன்படுத்தலை குறைப்பது ஆகியவை ஆகும்.


அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்

உடற்பயிற்சி, நுரையீரலை மட்டும் வலிமைப்படுத்துவதில்லை. அதையும் தாண்டி நமக்கு பல நன்மைகள் செய்கின்றது. நுரையீரல் இதயம் மற்றும் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் இதயத்திற்கான சுவாசத்தை சிறந்த முறையில் பெற முடியும். நாள்பட்ட நுரையீரல் நோயால் தாக்கப்பட்டவர்க்கு உடற்பயிற்சி பல நன்மைகளை செய்கிறது. நுரையீரல் சிறப்புடன் செயலாற்ற நம்மால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வது அவசியமாகும். குளிர்காற்று, ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை தூண்டினால், அதனை வெதுவெதுப்பாக்க கழுத்துகுட்டையை (கழுத்தையும் தோளினையும் மறைக்கும் துணி) பயன்படுத்துதல் அவசியம் அல்லது முகத்தை மறைக்க வேண்டும்.



வெளிப்புற காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கை அவசியம்

குறிப்பாக கோடை காலத்தில் சில பகுதிகளில் உள்ள காற்று மாசுபடுதலால், வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்வதும், வெளிப்புறத்தில் நேரம் செலவழிப்பதும் கூட நுரையூரலை பாதிக்கும். அதிலும் நுரையீரல் பிரச்சனைகளை கொண்டவர்கள், இக்காலத்தில் காற்று மாசுபடுதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


வீட்டின் உள்ளும் காற்றை மேம்படுத்துங்கள்

காற்று மாசுபாடு ஒரு வெளிப்புற பிரச்சனை மட்டும் அல்ல. மரம் எரிக்கும் அடுப்புகள், நெருப்பு, கட்டுமான பொருட்கள் மற்றும் சில மெழுகுவர்த்திகள் மற்றும் காற்று சுத்தப்படுத்திகள் உட்பட வீட்டின் உட்புற காற்றை மாசுபடுத்தும் ஆதாரங்கள் நிறைய உள்ளன. வீட்டின் உட்புற காற்றை மேம்படுத்த ஒரு மூன்று பக்க அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது. அதில் காற்றை மாசுபடுத்தும் ஆதாரங்களை நீக்குவது, காற்றோட்டத்தை மேம்படுத்துவது மற்றும் காற்று தூய்மையாக்கிகளை பயன்படுத்துவது ஆகியன ஆகும். காற்று தூய்மையாக்கிகள் தேவையற்ற துகள்களை நீக்கும் பணியை செய்கின்றன. ஆனால் அவை வாயுக்களை பாதிப்பதில்லை.


ஆரோக்கியமான உணவினை உண்ணுங்கள்

ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்த உணவினை உண்பது நமது நுரையீரலுக்கு நன்மை விளைவிக்கும் ஒரு ஆய்வு ஆதாரத்து தான் கூறுகிறது. மேலும் 2011-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் படி காலிஃப்ளவர், கேல், ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அதிகம் உண்பவர்களை, மேற்சொன்ன காய்கறிகளை குறைவாக உண்பவர்களை விட நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயம் பாதியாக குறைகிறது. மேலும் பச்சை இலைகளுடன் கூடிய சிறந்த காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது நமக்கு உயர்ந்த பாதுகாப்பு விளைவினை தருகிறது.


பணியாற்றும் போதும் நுரையீரலை பேணுங்கள்

கட்டுமான தொழிலில் இருந்து முடிவெட்டும் தொழில் வரை அனைத்துவிதமான தொழில்களில் ஈடுபடுவோர்க்கும் நுரையீரல் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். நம் தொழில் மூலம் ஏற்படக்கூடிய எண்ணற்ற காரணிகள் இருந்தாலும் பெயிண்ட், தீப்பொறி தூசி, துகள்கள் மற்றும் டீசல் வெளியேற்ற கழிவுகள் ஆகியவை அதிக தீமை தருபவை ஆகும். நாம் வேலை செய்யும் நிறுவனம் நமக்கு பாதுகாப்பு உபகாரணங்கள் வழங்கினால், நாம் அதை கட்டாயமாக அணிய வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் நாம் தொழிற்சங்க பிரதிநிதி, உள்ளூர் சுகாதார நிறுவனம்,மற்றும் அதே செயல்பாடுகள் கொண்ட உள்ளூர் நிர்வாகம் ஆகியோரை பாதுகாப்பு குறித்து அணுகலாம்.

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!


ரேடானின் அளவை பரிசோதியுங்கள்

ரேடான் இயற்கையாக உண்டாகும் ஒரு கதிரியக்க வாயு. இது பூமிக்கு அடியில் யுரேனிய பிளவு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பொதுவாக சுவர்கள் மற்றும் அடித்தளத்தில் உள்ள பிளவுகள் மூலம் ஒரு வீட்டை அடைகிறது. ரேடான் புகைப்பிடிக்கும் பழக்கமற்றவரை நுரையீரல் புற்றுநோய் தாக்கும் காரணிகளுள் முக்கிய காரணியாக உள்ளது. மேலும் இது புகைப்பிடித்த பின் நோய் உண்டாக்கும் இரண்டாவது அபாயகரமான காரணியாகவும் உள்ளது. நமது வீட்டை சோதனை செய்து அங்கு ரேடான் இல்லை என்று உறுதி செய்து கொள்வது நமது நுரையீரலுக்கு நல்லது.


சுத்தமான பொருட்களையே பயன்படுத்துங்கள்

நாம் வீட்டில் ஈடுபடும் நடவடிக்கைகளான வீட்டை சுத்தம் செய்தல், பொழுதுபோக்கு, வீட்டை மேம்படுத்துதல் போன்ற பல வேலைகள், நாம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வாயு மற்றும் துகள்களை எடுத்து செல்ல முடியும். எப்போதும் பாதுகாப்பான பொருள்களை தேர்வு செய்து, காற்றோட்டமான பகுதியில் வேலை செய்வதும், தூசியை தவிர்க்க முகமூடி அணிந்து கொள்வதும் நம்மை காத்து கொள்ளும் வழிகளாகும். எண்ணெய் சார்ந்த வண்ணப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றிலிருந்து ஆவியாகும் கரிம சேர்மங்கள் வெளியாகும். அதற்கு பதிலாக தண்ணீர் சார்ந்த வண்ணப்பூச்சுகள் தேர்வு செய்ய வேண்டும். சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களான அம்மோனிய மற்றும் ப்ளீச் ஆகியவை கலந்திருக்கும். ஆகவே அவற்றை வாங்கும் முன் அப்பொருட்களின் மீது ஒட்டியுள்ள சீட்டினை கவனமாக படிக்க வேண்டும்.


குண்டாக இருப்பது என்பது வாழ்க்கையை சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டு செல்ல மிகவும் தடையாக இருக்கும். ஏனெனில் ஒருமுறை குண்டாகிவிட்டால், அதனால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகள் விரைவில் வந்துவிடுகின்றன.

மேலும் அனைவருக்கும் உடல் பருமனடைந்தால், இந்த பிரச்சனைகள் மட்டும் தான் வரும் என்று தெரியும். ஆனால் உடல் பருமனடைந்தால், இதுப்போன்று இன்னும் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? ஆம், உதாரணமாக உடல் பருமனடைந்தால் நிம்மதியான தூக்கத்தை இழக்க நேரிடும். இதுப்போன்று நிறைய பிரச்சனைகள் உடல் பருமனடைந்தவர்கள் சந்திப்பார்கள்.


தூக்கமின்மை

உடல் பருமனடைந்தவர்களால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் தூங்கும் போது, காற்று செல்லும் வழியானது அடைத்து, தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இதனால் தூங்கும் போது மிகுந்த கஷ்டத்தை உடல் பருமன் அடைந்தவர்கள் சந்திப்பார்கள்.


குறட்டை

ஒருவேளை அசதியில் தூங்கிவிட்டால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தினால், மற்றவர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் குறட்டையின் சப்தமானது எழுகிறது.


விரைவில் முதுமை தோற்றம்

ஆய்வு ஒன்றில், உடல் பருமன் அடைந்தவர்கள் புகைப்பிடிப்பவர்களை விட சீக்கிரம் முதுமை தோற்றத்தை பெறுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கண்புரை நோய்

பொதுவாக கண்புரை நோயானது உடல் பருமனடைந்தவர்களுக்கு ஏற்படும். ஏனெனில் உடல் பருமன் அதிகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு குறைந்துவிடுகிறது.


செரிமான பிரச்சனை

உடல் பருமன் அடையும் போது, வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களானது வயிற்றில் பிரச்சனையை ஏற்படுத்தி, அசிடிட்டி, செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.


குடலிறக்கம்

உடல் பருமன் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர், அவர்களுக்கு குடலிறக்கத்திற்கான பாதிப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் வயிறு பெரிதாக இருப்பதால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால், அப்போது வெட்டுப்பட்ட இடத்தில் தசைகளானது வளர்ந்துவிடுகிறது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் கடுமையான வலியை உணரக்கூடும்.


புரோஸ்டேட் அளவு அதிகரிக்கும்

உடலின் பருமன் அதிகரிக்கும் போது, ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியும் பெரிதாக ஆரம்பிக்கும். இதனால் புரோஸ்டேட் பெரியதாகி, நாளடைவில் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.


கற்பதில் சிரமம்

சிறுவயதிலேயே குழந்தைகள் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டால், ஹார்மோன் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்களின் கற்கும் திறனானது குறைந்துவிடும்.


நோயெதிர்ப்பு சக்தி குறைவு

உடல் பருமன் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும். இதனால் தான் அவர்களுக்கு நோய்களானது எளிதில் தொற்றுகிறது.


ஆஸ்துமா

அதிகப்படியான உடல் பருமன் இருந்தால், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதோடு, அந்த ஆஸ்துமாவும் மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.


கீல்வாதம்

அதிகப்படியான யூரிக் அமிலத்தின் வெளிப்பாட்டினால், மூட்டுகளில் உள்ள திசுக்களாது உடைக்கப்பட்டு கீல்வாதம் ஏற்படுகிறது. பொதுவாக இத்தகைய பிரச்சனை எந்த வயதில் உடல் பருமனுடன் இருந்தாலும் ஏற்படும்.


விறைப்புத்தன்மை குறைபாடு

ஆண்கள் உடல் பருமனாக இருக்கும் போது, நீரிழிவு, உயர் இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் பெரிதான புரோஸ்டேட் ஆகியவற்றினால், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டு, குழந்தை பிறப்பதில் பிறப்பதில் கஷ்டமாகிவிடும்.


லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்கிறார்கள்.எதிரில் நிற்பவன் ஏழை என்று தெரியும்.அவன் கடன் வாங்கித்தான் கொடுக்கவேண்டும்.அடுத்தவன் கஷ்டம் நமக்கு முக்கியமல்ல்! பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.வன்கொடுமைகளுக்கு முடிவில்லை.

தங்களது கீழ்த்தரமான ஆசைகளுக்காக உயிர்களைப் பலியாக்குவது பற்றி கவலைப்படுவதேயில்லை.இன்னும் இன்னும் இருக்கிறது.இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள விஷயம் இதுதான் –நாம் சக மனிதனை எந்திரமாகவே பார்க்கிறோம்.நமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டுமென்று கருதுகிறோம்.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்திரமாக நினைத்துக்கொள்வதில் பிரச்சினை துவங்குகிறது.நான் விரும்பும் படிப்பை படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.தாங்கள் சொல்லும் பையனை,பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

அவர்களுக்கு நல்லது எது என்று எனக்குத்தெரியும் என்பார்கள்.குடும்பங்களைக் கவனிக்கும் பலருக்குத்தெரியும்.பெரும்பாலும் இவையெல்லாம் தந்தையால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். தனது மனைவிக்கு,குழந்தைகளுக்கு மனம் என்று ஒன்று இருக்கிறது என்பது அவர்களுக்கு பொருட்டே அல்ல!

மனத்தினை மறுத்து எந்திரமாக மட்டுமே கருதி வளர்க்கப்பட்ட ஒருவர் சக மனிதனையும் அப்படியே கருதுகிறார்.இன்னொரு மனிதனை புரிந்து கொள்வதில் பிரச்சினை இருக்கிறது.இதன் முதல்படியாக கவனமாக கேட்பது பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.நம்மைச்சுற்றி உள்ளவர்களை புரிந்து கொள்ள அவர்களது உணர்வுகளை நாமும் உணரவேண்டும்.இன்றைய மனிதனின் ஆகப்பெரிய துக்கமெல்லாம் என் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதாக இருக்கிறது.


ஆங்கிலத்தில் empathy என்ற சொல்வார்கள்.தமிழ் அகராதிகளில் சில இடங்களில் பச்சாதாபம் என்று போட்டிருக்கிறார்கள்.கற்பனையாக இன்னொருவரின் உள்ளக்கிளர்ச்சியை உணர்தல் என்று சில இடங்களில் இருக்கிறது.இன்று வளர்த்தெடுக்க வேண்டிய திறமை என்பது இதுதான்.குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு திறமை.

I feel how you feel என்று புரிந்து கொள்ளலாம்.கணவன்,மனைவி ஆகட்டும்,பெற்றோர் குழந்தைகள் ஆகட்டும்,நண்பர்கள்,உடன் பிறந்தவர்கள்என எல்லா உறவுகளிலும் இதுவே முக்கியமானது.ஆமாம்,நீங்கள் உணர்வதை நானும் உணர்ந்தால்? பிரச்சினைகளின் தீர்வு இங்கேதான் இருக்கிறது.நம்மால் அப்படி உணரமுடியாமல்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

கற்பனையாக மற்றவர் உணர்வதை உணரும் திறமையை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். அப்படியானால் நாம் கற்பனைவளத்தை குழந்தைகளிடம் உருவாக்கவேண்டும்.

ஏழை,எளியவர்களுக்காக பரிந்து பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.அவர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு பேசுகிறார்கள்.சமூகத்தின் பல விஷயங்களை விவாதிக்கிறார்கள்.அவர்கள் எங்கிருந்து அந்த்த் திறமையை பெற்றார்கள்? அவர்கள் பாடப்புத்தகங்களைத்தாண்டி பல்வேறு விஷயங்களை படிக்கிறார்கள்.

Empathy  என்பதை கூடுவிட்டுக்கூடு பாய்வது என்றும் நாம் சொல்லலாம்.நம்முடைய எழுத்தாளர்களை நாம் இப்படி சொல்கிறோம்.அவர்கள் இத்திறமையை எங்கிருந்து பெற்றார்கள்? கவனித்துக்கேட்பதன் மூலமாகவும்,பள்ளிப்படிப்பைத்தாண்டி ஏராளமான நூல்களைப் படித்தும் பெற்றார்கள்.

கலை இலக்கியம் தவிர்த்து இத்திறமையை வளர்த்துக்கொள்வது சாத்தியமானதல்ல! பலருக்கு இந்த அனுபவம் இருக்க முடியும்.சினிமா பார்த்து உணர்ச்சிவசப்படுகிறோம்.நடிப்பவரின் துயரத்தில் நாமும் பங்குபெறுகிறோம்.நாவலில் கதை மாந்தர்களின் உணர்ச்சியை நாமும் அனுபவிக்கிறோம்.நிஜத்தில் அப்படி ஒரு சூழ்நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு கதை சொல்வதுதான் முதல்படி.அத்தைகளும் பாட்டிகளும் இதை சிறப்பாக செய்து வந்தார்கள்.இன்றைய சூழல் அப்படி இல்லை.சிறுவர்களுக்கான இலக்கியம்,கலை வளராத சமூகம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.உரிய நேரத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

பாதி கதை சொல்லிவிட்டு மீதி கதையை அவர்களாக உருவாக்கத் தூண்ட வேண்டும்.குழந்தைகள் கற்கும் திறனில் கற்பனை வளம் நல்ல மாற்றத்தைக்கொண்டு வரும்.சென்ற பதிவில் கூறியவாறு கவனித்துக்கேட்கவும்,சக மனிதர்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளும் திறனும் பெற்றுவிட்டால் போதுமானது.எத்தகைய சூழ்நிலையிலும் ஒருவரால் சிறப்பாக இயங்க முடியும்.

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்