Monday, 17 March 2014



நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.

மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள் (தூசிகள், துகள்கள்) நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.

நுரையீரலில் இருந்து வெளிப்படும் நாம் போடும் (தும்மல்) காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும் .

 உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.

ஆனால் அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழைந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர்...

அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்கவும்.(கோலி அடிப்பதுபோல) அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும்.

ஆனால் இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது.

 ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.

அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்துக் கொள்ள வேண்டும்.

சுண்டுவிரல்தானே அதால என்ன செய்யமுடியும்னு நினைக்காதீங்க.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுங்க.... காசா.. பணமா..... முயற்சித்துதான் பாருங்களேன்...


தலையில் நீர்கோர்த்து கொண்டு அவதிப்படுபவர்களுக்கு ஒரு எளிய வைத்தியம்...

இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், கால் டீஸ்பூன் அளவு சுண்ணாம்பை

(வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு) குழைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும்

பத்து போட்டால்.... நன்கு தூக்கம் வருவதுடன், எழும்போது தலையில் நீர்

கோர்த்ததால் உண்டான தலைபாரம் மற்றும் வலியும் போய் விடும்....



மஞ்சள்-சுண்ணாம்பு பத்துக்கும்.... அக்குபஞ்சருக்கும் என்ன தொடர்பு என்று

கேட்காதீர்கள்... வேறு ஒரு தேடலின் போது ஒரு சித்தர் தம்முடைய பாடலில்

பரி பாஷையில் சொல்லி இருந்ததை இங்கே தெளிவாக சொல்லி

இருக்கிறேன்....

Sunday, 16 March 2014



1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும்.சிலர் சுட்டு தின்பார்கள்.குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும். கறி  வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட .வேண்டும்.


ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும்.இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது.நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்,'' கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார்.ஆனால் அவரால்  காரணத்தைச்  சொல்லி விளக்க  முடியவில்லை. 

வீதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது  சுலபம்.ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன்.உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி.முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல்.


அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில் உண்டு..குறைந்த அளவில் முழுமையான சத்துக்களை கொடுக்கும் வேறு உணவைக் குறிப்பிட   முடியாது.இரும்பு,செலினியம்,துத்தநாகம் என்று பயனுள்ளவை அதிகம் இருக்கிறது.ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு.போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும்  இதன் சிறப்பு.

அதிக ஏ வைட்டமின் காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.ஆனால் ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகு விட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஈரல் சாப்பிடும் அன்று ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் அன்று தவிர்த்துவிடலாம்.


எதிரான விஷயம் என்று பார்த்தால் கொலஸ்ட்ராலை குறிப்பிடலாம்.ஆட்டு  ஈரலில் கொஞ்சம் அதிகம். கொலஸ்ட்ரால்  பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.மற்றவர்களும் ஒரு முழு பூண்டை தட்டி உடன் சேர்த்துக்கொள்ளலாம்.பூண்டு  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

பொதுவாக கலர் பவுடர் தூவப்பட்ட சிக்கன் கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல! சாலையோரக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது.உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட ஈரல் இருக்க வாய்ப்புண்டு.ஈரல் மட்டுமல்ல,அசைவ உணவுகளை வீட்டில் தயாரிப்பதே மிகச் சரி.


Saturday, 15 March 2014



"எனக்கு நேரமே இல்லை! என்னுடைய கடுமையான பணிச்சுமையில், இதற்கு நேரம் ஒதுக்க வழியே இல்லை" வேலைகளைத் தள்ளிப் போட இது தான் எல்லாரும் எளிதாக கூறும் சாக்கு. அதற்காக, நாம் வேலைகளே இல்லாத மந்தமான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

உடலும் உள்ளமும் தகுதியாக இருக்க வேண்டுமென்றால், இரண்டுக்கும் போதுமான வேலைகளை உடலுக்கு அளிக்க வேண்டும். நமது பணிச்சுமைகளுக்கிடையில், நமது இயல்பான பணிகளினூடே, நமது உடல்தகுதிக்கான (fitness ) பயிற்சிகளையும், எப்படி சேர்த்துக் கொள்வது என்பது குறித்து இப்போது காணலாம்.

நமது இயல்பான பணிகளைச் செய்யும் போதே, நமது தசைகள், நரம்புகள், எலும்புகள், ஏன், மனதுக்கும் கூட சிறு சிறு பயிற்சிகளைச் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உடலையும், மனதையும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள முடியும்.

ஃபிட்னஸ் என்றால் என்ன?

உங்களது அன்றாட உடல் சார்ந்த பணிகளை, களைப்பில்லாமலும், எளிதாகவும், செய்த பிறகும் நீங்கள் களைப்பின்றி உணர்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் உடல் ஃபிட்டாக உள்ளது என்று பொருள். ஆம். உங்களது ஆற்றல் நிலையும், உடல் வலிமையும், போதுமான அளவில் உள்ளது என்று பொருள்.

ஆனால், அன்றாட பணிகளைச் செய்து ஓய்ந்த பிறகு, சக்தியெல்லாம் தீர்ந்து களைப்பாக உணரும் தருணங்களைக் கூட நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். அப்படியென்றால், உங்களது அன்றாட வேலைகளுக்கிடையில் சிறுசிறு ஃபிட்னஸ் உடற்பயிற்சிகளை நுழைத்து, உங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளவும், களைப்பின்றி உணர வைக்கவும் நேரம் வந்துவிட்டது.

30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடந்தால்,அது உங்கள் இதயத்துடிப்பு வீதம் அதிகரித்து, அதிகமான கலோரிகளை எரித்து, உடல் மெட்டபாலிசத்தினைத் தூண்டும். உங்கள் ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும்.

மின் தூக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். மாடிப்படிகளைப் பயன்படுத்துவதனால், ஏற்படும் நன்மைகள். - உடல் எடைகுறையும் - ஸ்டாமினா அதிகரிக்கும் - இதய இயக்கத்தை ஊக்குவிக்கும்

உங்களது பிருஷ்டத்தசைகளை உங்கள் கைகளால் பிசையுங்கள். இது அதிகமான கலோரிகளை எரிக்க உதவும். உங்கள் பிருஷ்ட தசைகளை 3 நாள்களுக்கு ஒருமுறை 10-15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வடிவான பின்புறங்களைப் பெறுங்கள். இது போல நிற்கும் போதோ, அமரும் போதோ உங்கள் கைகளால், மசாஜ் செய்துவிடலாம்.

நிற்கும் போது நன்றாக நிமிர்ந்து நில்லுங்கள். அமரும் போது கூன் போடாமல் முதுகினை நன்றாக நிமிர்த்தி அமருங்கள். இப்படி செய்தால் கழுத்திலிருந்து கால் வரை ஏராளமான நரம்புகள் இளகும். நமது அமரும் தோற்றமும் நிற்கும் தோற்றமும் நேராக இருந்தால் நமது தன்னம்பிக்கையும் பெருகும்.

பின்வரும் பயிற்சியைச் செய்து உங்கள் பின்புறத்தசைகளுக்கு வலிமையூட்டுங்கள். உங்கள் முதுகுத்தசைகளுக்கு இடையில் ஒரு பென்சிலை நிறுத்தி தசைகளால் பிடித்துக் கொள்வது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். பென்சில் விழாமல் இறுகப் பிடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் முதுகுத்தசைகளும், அதனைச் சுற்றியுள்ள தசைகளும் வலிமை பெறும்.

தண்ணீர் பாட்டிலையோ, சூப் கிண்ணத்தையோ தூக்கும் போது உங்கள் கைகளை தரைக்கு இணையாக இருக்குமாறு நீட்டி தூக்குங்கள். அதாவது உங்கள் உடலும் கைகளும் ஆங்கில எழுத்து போல இருக்க வேண்டும். இதன் மூலம் கையிலுள்ள தசைகள் வலிமை பெறும்.

நீங்கள் ஷாப்பிங் செய்துவிட்டு பையுடன் வரும் போது அதனை உங்கள் கையில் பிடித்துக்கொண்டு, டிம்பிள்ஸ் தூக்குவது போல தூக்கவும். பையினை முழங்கையிலிருந்து தோள்பட்டை வரை தூக்கி இறக்குங்கள். உங்கள் இருதலைத்தசைகளுக்கு களைப்பு ஏற்படும் வரை இதனை செய்யுங்கள்.

நீங்கள் மேசையில் அமர்ந்து பணிபுரிபவராக இருந்தால், பணிக்கு இடையில் உங்கள் தசைகளுக்கு தளர்ச்சி அளிக்கும் வண்ணம் இடையிடையே சற்று நேரம் நடப்பது அவசியம். சற்று நேரம் நடப்பதால், தசைகளில் இலகுத்தன்மை ஏற்படும். இரத்த ஓட்டம் சீராகும்.

பாத்திரம் துலக்குதலும், பாத்திரங்களில் பிடித்துள்ள உணவுத்துணுக்குகளை சுரண்டி அகற்றுதலும் உங்கள் கைகளில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். அதே போல சமையல் செய்தலும் கைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். தசைகள் வலிமையுடனும் பொலிவுடனும் திகழ சமையல் செய்யுங்கள்.

உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொலைபேசியில் பேசுவது குறைந்தபட்சம் 2 நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்நேரத்தில் நடந்து கொண்டே பேசுங்கள்.

வீட்டினை சுத்தம் செய்வது என்பது உண்மையிலேயே உடலுக்கு மிகவும் சிறப்பான பயிற்சியாகும். தூசு தட்டினாலும், குப்பையைப் பெருக்கினாலும், ஒட்டடை அடித்தாலும், தரையைக் கழுவினாலும், நீட்டி, நிமிர்ந்து, குனிந்து வேலை செய்ய வேண்டியிருக்குமாதலால், அனைத்துமே உடலுக்கு நல்லது. எனவே அடிக்கடி வீட்டை சுத்தப்படுத்துங்கள். வீடும் அழகாகும், உங்கள் உடலும் அழகாகும்.

பாலுறவு கொள்ளுவதால், இயற்கையாகவே, உடல் எடை குறைகிறது. அத்துடன் உடலில் எண்டார்ஃபின் சுரப்பினையும் அதிகரிக்கிறது. அளவோடு பாலுறவு கொள்ளுதல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

நல்ல முழுமையான ஓய்வு என்பது ஆரோக்கியத்துக்கு அறிகுறி. உங்களது மனதையும், உடலையும், புத்துயிர் ஊட்டிக் கொள்ள சிறப்பான வழி தூக்கம். இதன் மூலம், மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.



சிலருக்கு, உடற்பயிற்சியின் சிறப்பினை எடுத்துக் கூறுவதற்கு யாராவது ஒருவர் இருந்தால் தான், உடற்பயிற்சி செய்வார்கள். தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்தால் தான், அவர்கள் எதனையும் செய்வார்கள். இரவு உணவுக்குப் பிறகு, சேர்ந்து நடப்பதற்கு நண்பர் ஒருவர் அமைந்துவிட்டால், அதுவே வழக்கமாகிவிடும். இதைப் போல சில முறைகளை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இரவு உணவுக்குப் பிறகு நடப்பதால், உடல் எடை குறைந்து உடல் மெலிவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

Thursday, 13 March 2014



பின்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நமது மரணத்தை தோராயமாக முன்கூட்டியே கணிக்கக் கூடிய ரத்த பரிசோதனையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ரத்த பரிசோதனையை மேற்கொண்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணமடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து விட முடியுமாம்.

இதைக் கேட்பதற்கு சற்று பீதியாக இருந்தாலும் கூட, இந்த பரிசோதனை மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு உயிராபத்து இருக்கிறதா என்பதை ஓரளவு கணித்து விட முடியும் என்று இந்த ஆய்வுக் குழு அடித்துக் கூறுகிறது.


என்.எம்.ஆர் டெஸ்ட்...

நியூக்ளியார் மேக்னெட்டிக் ரிசொனன்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்று இந்த சோதனைக்கு பெயர் வைத்துள்ளனர். சுருக்கமாக என்.எம்.ஆர்.
பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....


பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....

இந்த சோதனையை பின்லாந்தின் ஊலு என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மிகா அலா கொர்பெலா என்பவர் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.


மார்க்கர்கள் மூலம்...

இதுகுறித்து இந்த ஆய்வாளர் கூறுகையில், " எங்களது இந்த என்.எம்.ஆர். சோதனையில் பல பயோ மார்க்கர்களைப் பயன்படுத்துகிறோம். அது உங்களது உடலின் உண்மை நிலையை சொல்லி வடும். அதை வைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணத்திற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம் என்றார்.


ரத்த மாதிரி சோதனை....

கிட்டத்தட்ட 17,000 பின்லாந்து மற்றும் எஸ்டோனியர்களின் ரத்த மாதிரியை வைத்து இந்த பரிசோதனை ஆய்வை நடத்தியுள்ளனராம்.


மரணத்தைக் கணிக்கும் காரணிகள்...

இந்த ஆய்வில், நான்கு முக்கியமான பயோ மார்க்கர்கள்தான் நமது மரணத்தை கணித்துச் சொல்லுகிறதாம். அதாவது அல்புமின் மற்றும் ஆல்பா 1 அசிடிக் கிளைக்கோ புரோட்டீன் என்ற இரண்டு புரத அளவுகள், லிபிட் மெட்டபாலிசம் வேரியபிள்கள் மற்றும் சிட்ரிக் அமில அடர்த்தி ஆகியவைதான் இவை.


ஆய்வில் தகவல்....

இந்த நான்கு பயோ மார்க்கர்களும் அனைத்து மனிதர்களின் ரத்தத்திலும் கலந்துள்ளன. இவற்றின் அளவும், தன்மையும்தான் ஒருவருடைய மரணத்தை நிர்ணயிக்கிறதாம். இதைத்தான் இந்த ஆய்வும் கூறுகிறதாம்.


ஆரோக்கிய வாழ்வுக்கு...

வயது, புகை பிடித்தல் பழக்கம், மது அருந்தும் அளவு, கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச் சத்து, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவையும் கூட ஒரு மனிதனின் உயிர் ஸ்திரத்திற்கு முக்கியமானவைதான். இவற்றின் பாதிப்பாலும் மரணம் ஏற்படுகிறது.

முதல் ஆய்வு....

இதுகுறித்து பின்லாந்து பல்கலைக்கழக என்.எம்.ஆர். ஆய்வக தலைவர் பாசி சொய்னென் கூறுகையில், " உலகிலேயே இப்படிப்பட்ட ஆய்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இதில் மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றார்.

ரத்தப்பரிசோதனை...

இப்போது இந்த ஆய்வு தொடக்கக் கட்டத்தில் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் ஒருவரது மரணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கணித்துக் கூறி விடும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கம் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வாழ்நாளை நீடிக்கலாம்...

மேலும் அவ்வப்போது இந்த ரத்த பரிசோதனையை செய்து நமது உடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, வாழ்நாட்களை நீ்ட்டிக்கவும் வழி பிறக்கும். PLoS Medicine என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.


மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உயிருக்கு ஆபத்தாகும் என்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கவலை, மனச்சோர்வு, தனியாக இருப்பது போன்ற உணர்வு மனிதர்களுக்கு விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இங்கிலாந்து நாட்டில் 68000 பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதயநோய், புற்றுநோய் மற்றும் பல நோய்களினால் பாதிப்பிற்குள்ளாகி குறைந்த வயதிலேயே மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்து வந்தது.


 ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து 35 வயதிற்கு மேற்பட்ட 68 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். கடந்த 1994 ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வில் பல உண்மைகள் கண்டறியப்பட்டன.


உடல்ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு மனரீதியான சிக்கல்கள் காரணமாக அமைகின்றன. மது அருந்துதல், புகைப்பழக்கம், போதைப்பழக்கத்தினால் குறைந்த வயதில் சிலர் மரணத்தை தழுவினாலும், சைக்கலாஜிகல் ரீதியான சிக்கல்களினால் பாதிக்கப்படும் பலர் விரைவில் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.


தனியாக இருப்பது போன்ற அச்சம், மனச்சோர்வு, போன்றவை நோய்களை தோற்றுவிக்கின்றன. இதனால் பெரும்பாலானோர் குறைந்த வயதில் மரணமடைந்து விடுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


எனவே சிறிய அளவில் மனரீதியான சிக்கல்கள் ஏற்பட்டாலே அவற்றினை தீர்ப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


ஏனெனில் மனரீதியாக ஏற்படும் சிறு பிரச்சினைதான் உடல்ரீதியான நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். எனவே சிறு பிரச்சினைதானே என்று கவனிக்காமல் விட்டு விடாமல் பிரச்சினைகளை களைய முற்படவேண்டும் என்கிறார் ஆய்வினை மேற்கொண்ட டாக்டர் ரஷ்

பிரபலமான இடுகைகள்